தமிழ்நாடு செய்திகள்

திருப்பூரில் பிரசார வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

Published On 2024-03-20 14:13 IST   |   Update On 2024-03-20 14:15:00 IST
  • தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் விவரங்களை, சம்பந்தப்பட்ட கட்சியினர் ஆன்லைனில் தான் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • பிரசார வாகனத்தின் வண்ண புகைப்படம், பதிவுச்சான்றிதழ், வாகனக் காப்பீடு இவையெல்லாம் இருக்க வேண்டும்.

திருப்பூர்:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தை தொடங்க உள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் விவரங்களை, சம்பந்தப்பட்ட கட்சியினர் ஆன்லைனில் தான் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறும்போது, தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கான வாகன அனுமதியை பல்வேறு கட்சிகளும் அணுகக்கூடும். இது ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. பிரசார வாகனத்தின் வண்ண புகைப்படம், பதிவுச்சான்றிதழ், வாகனக் காப்பீடு மற்றும் வாகனத்தின் தற்காலிக புகை அளவு சான்றிதழ்கள் இவையெல்லாம் இருக்க வேண்டும். இவை இல்லாதபோது, அந்த வாகனங்கள் பிரசாரத்துக்கு அனுமதிக்கப்படாது.

பொதுவாகவே அனைவரும் பதிவுசான்றிதழ் வைத்திருப்பார்கள். ஆனால் காப்பீடு, தற்காலிக புகை அளவு சான்றிதழ் உள்ளிட்டவை இருக்காது. ஆகவே அப்படிப்பட்ட வாகனங்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் அனுமதி கிடையாது. கடைசி நேரத்தில் பலரும் எங்கள் வாகனங்களுக்கு, பிரசாரத்தில் அனுமதி தரப்படவில்லை என்பதற்கான காரணங்களில் மேற்கண்ட ஏதேனும் ஒரு காரணம் இருக்கக்கூடும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News