தமிழ்நாடு செய்திகள்

ஆலங்குளத்தில் ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது

Published On 2022-11-06 10:52 IST   |   Update On 2022-11-06 10:52:00 IST
  • மாணவியை ஆசை வார்த்தை கூறி இசக்கிமுத்து கடத்தி சென்றுவிட்டார்.
  • மகள் காணாமல் போனது குறித்து மாணவியின் பெற்றோர் ஆலங்குளம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் இசக்கிமுத்து(வயது 21). இவர் பள்ளி மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 4-ந்தேதி இரவு அந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி இசக்கிமுத்து கடத்தி சென்றுவிட்டார். இதற்கிடையே தனது மகள் காணாமல் போனது குறித்து மாணவியின் பெற்றோர் ஆலங்குளம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், மாணவியை இசக்கிமுத்து கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று தனது சகோதரி வீட்டில் பதுங்கி இருந்த இசக்கிமுத்துவை போலீசார் பிடித்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News