தமிழ்நாடு

பிறந்து சில நாட்கள் ஆன நிலையில் பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

Published On 2023-11-09 08:31 GMT   |   Update On 2023-11-09 08:31 GMT
  • குழந்தைக்கு நேற்று இரவு உடல் நிலை சரியில்லாமல் போனதாக தெரிகிறது.
  • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கும்மாளத்தை அடுத்த முத்துநாயக்கன்போடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ்குமார்.

இவரது மனைவி மல்லிகா (வயது25). இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் மல்லிகா மீண்டும் கர்ப்பமானார். இவர் கடந்த சில நாட்களுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு நேற்று இரவு உடல் நிலை சரியில்லாமல் போனதாக தெரிகிறது. உடனே குழந்தையை ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையை பெற்றோர்கள் அடக்கம் செய்து விட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த பேரிகை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் நன்றாக பிறந்த குழந்தை திடீரென்று இறந்ததால், குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பேரிகை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சப்பாடி கிராமத்தில் இதேபோன்று ஒரு குழந்தை மர்மமான முறையில் இறந்ததாக கூறி உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் முத்துநாயக்கன்போடூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News