தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலையத்துக்கு 20 கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்த அரசாணை வெளியீடு

Published On 2023-11-24 08:10 GMT   |   Update On 2023-11-24 08:10 GMT
  • விவசாய நிலங்களை கையகப்படுத்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
  • பரந்தூரை சுற்றி உள்ள 20 கிராமங்களில் மொத்தம் 5746 ஏக்கர் நிலம் கையக்கப்படுத்தப்பட உள்ளன.

சென்னை:

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு சுற்றி உள்ள கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

விவசாய நிலங்களை கையகப்படுத்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டு உள்ளது.

பரந்தூரை சுற்றி உள்ள 20 கிராமங்களில் மொத்தம் 5746 ஏக்கர் நிலம் கையக்கப்படுத்தப்பட உள்ளன. இதற்காக அரசு ரூ.19.24 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

Tags:    

Similar News