தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக குறைப்பு

Published On 2023-01-18 09:22 IST   |   Update On 2023-01-18 09:22:00 IST
  • மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
  • மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 108.94 அடியானது.

மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று விநாடிக்கு 1,100 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 1,108 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு இன்று காலை முதல் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

நேற்று 109.51 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று மேலும் சரிந்து 108.94 அடியானது.

Tags:    

Similar News