தமிழ்நாடு

தமிழ்மொழி மேம்பாட்டுக்கு மத்திய அரசு உரிய நிதியை ஒதுக்க வேண்டும்- மக்கள் நீதிமய்யம் கோரிக்கை

Published On 2022-08-02 10:02 GMT   |   Update On 2022-08-02 10:02 GMT
  • தமிழ் மொழிக்கு வேண்டியது புகழ் மாலையல்ல. வளர்ச்சிப்பாதை.
  • மத்திய அரசு தமிழ் மொழியின் வளர்ச்சியை முடக்கும் காரியத்தை செய்வது வேதனை அளிக்கிறது.

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்துக்கு வரும்போது மட்டும் மேடைகளில் தமிழ் மொழியையும், திருக்குறள், சங்க இலக்கியப் பாடல்களையும் மேற்கோள்காட்டி பேசுவதும், நடைமுறையில் தமிழைப் புறக்கணிப்பதும் மத்திய அரசுக்கும், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கும் வாடிக்கையாகி விட்டது. இப்போது தமிழ் மொழிக்கு வேண்டியது புகழ் மாலையல்ல. வளர்ச்சிப்பாதை. ஆனால் மத்திய அரசு தமிழ் மொழியின் வளர்ச்சியை முடக்கும் காரியத்தை செய்வது வேதனை அளிக்கிறது.

இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளுக்கு மத்திய அரசால் ஒதுக்கப்படும் நிதியுடன் ஒப்பிடுகையில், மேன்மையான தமிழ் மொழிக்கு மிகக்குறைந்த அளவு நிதியே ஒதுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே தமிழ்மொழி மேம்பாட்டுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News