தமிழ்நாடு

தஞ்சை மாவட்டத்திற்கு 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட கலெக்டர் உத்தரவு

Published On 2023-01-06 10:29 GMT   |   Update On 2023-01-06 10:29 GMT
  • தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா இன்று மாலை தொடங்குகிறது
  • வரும் 11-ந் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா இன்று மாலை தொடங்குகிறது. இந்த விழா வருகிற 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வரும் 11-ந் தேதி (புதன்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 21.1.2023 (சனிக்கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறி சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணிகளுடன் இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News