தமிழ்நாடு (Tamil Nadu)

தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் காமராஜர்- இந்திய நாடார்கள் பேரமைப்பு அறிக்கை

Published On 2023-07-18 09:50 GMT   |   Update On 2023-07-18 09:50 GMT
  • கர்மவீரர் காமராஜர் தான் தமிழகத்தில் முதன் முதலாக கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்.
  • காமராஜர் ஆட்சிக்கு வந்தவுடன் இழுத்து மூடப்பட்ட 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஆரம்ப பள்ளிகளை திறந்தார்.

சென்னை:

இந்திய நாடார்கள் பேரமைப்பின் தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் விடுத்து உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நூலகத்திறப்பு விழாவில் பேசும்போது "கல்வி புரட்சிக்கு வித்திட்டது தி.மு.க என்றும், அதன்பின் தான் தமிழகத்தில் கல்வி கற்பவர் எண்ணிக்கை அதிகரித்தது" என்றும் பேசியிருப்பது வரலாற்றினை மாற்ற நினைக்கும் செயலாக தெரிகிறது.

கர்மவீரர் காமராஜர் தான் தமிழகத்தில் முதன் முதலாக கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர். காமராஜர் ஆட்சிக்கு வந்தவுடன் இழுத்து மூடப்பட்ட 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஆரம்ப பள்ளிகளை திறந்தார். தமிழகத்தில் கல்வி புரட்சி கொண்டு வந்தது காமராஜர் தான். இதை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பாராட்டி காமராஜரின் பிறந்தநாளை 2006 -ம் ஆண்டு கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News