தமிழ்நாடு

தென்ஆப்பிரிக்காவில் வி.ஜி.பி.யின் 9 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு

Published On 2023-11-03 10:21 GMT   |   Update On 2023-11-03 10:21 GMT
  • நவம்பர் 1-ம் நாள் தொடங்கி 3 நாட்களுக்கு தமிழ்ப் பண்பாட்டு நிகழ்வு நடத்துகின்றனர்.
  • கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயத்தில் மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சி.இ.சத்யா, துர்கா சத்யா மற்றும் மலேசியாவிலிருந்து பல்வேறு தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை:

தென்ஆப்பிரிக்கா டர்பனில் உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமும், கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயம் மற்றும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து, நவம்பர் 1-ம் நாள் தொடங்கி 3 நாட்களுக்கு தமிழ்ப் பண்பாட்டு நிகழ்வு நடத்துகின்றனர்.

இவ்விழாவில், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 157-வது சிலையை தென்ஆப்பிக்கா நாட்டின் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் பெருந்தமிழன் டாக்டர் மிக்கி செட்டி தலைமையில் கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயத்தின் தலைவர் பெருந்தமிழன் மாஸ்டர் ஹீகான் மெர்வின் ரெட்டி முன்னிலையில் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் நிறுவனர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயத்தில் மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சி.இ.சத்யா, துர்கா சத்யா மற்றும் மலேசியாவிலிருந்து பல்வேறு தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News