தமிழ்நாடு

திருத்தணி பகுதியில் பலத்த மழை- 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது

Published On 2022-12-12 07:48 GMT   |   Update On 2022-12-12 07:48 GMT
  • திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2000 ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.
  • கோணசமுத்திரம், பாலாபுரம், சந்திரவிலாசபுரம் உள்ளிட்ட பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் வேர்க்கடலை மிளகாய் ஆகிய பயிர்களும் நீரில் மூழ்கி வீணாகி உள்ளது.

திருவள்ளூர்:

மாண்டஸ் புயல் காரணமாக திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. இன்று விடிய விடிய பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2000 ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் கோணசமுத்திரம், பாலாபுரம், சந்திரவிலாசபுரம் உள்ளிட்ட பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் வேர்க்கடலை மிளகாய் ஆகிய பயிர்களும் நீரில் மூழ்கி வீணாகி உள்ளது.

சேதம் அடைந்த பயிர்களை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News