தமிழ்நாடு

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது- சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

Published On 2022-12-01 06:00 GMT   |   Update On 2022-12-01 06:00 GMT
  • தென்காசி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
  • அருவிகள் அனைத்திலும் தண்ணீர் வரத்து சீரானதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவி தவிர்த்து ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட மற்ற அருவிகள் அனைத்திலும் தண்ணீர் வரத்து சீரானதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மெயின் அருவியிலும் தண்ணீர் வரத்து சீரானதால் இன்று காலை முதல் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் நீராடினர்.

Tags:    

Similar News