தமிழ்நாடு

தொடர்மழை எதிரொலி: சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைப்பு

Published On 2023-11-30 02:56 GMT   |   Update On 2023-11-30 02:56 GMT
  • சென்னையில் நேற்று அதிகாலை முதலே மழை பெய்தது.
  • குடியிருப்பு பகுதிகளிலும், நகரின் முக்கிய சாலைகளிலும் மழைநீர் சூழ்ந்தது.

சென்னை:

இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

பருவமழை தீவிரமாக இருப்பதால், தொடர்ந்து சென்னையில் மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

சென்னையில் நேற்று அதிகாலை முதலே மழை பெய்தது. மாலை 5 மணிக்கு மேலாக மழை அடித்து பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளிலும், நகரின் முக்கிய சாலைகளிலும் மழைநீர் சூழ்ந்தது. இரவு தாண்டியும் மழை நீடித்த நிலையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்மழை எதிரொலியாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு வேறொரு தேதியில் நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News