தமிழ்நாடு செய்திகள்

மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட கெபி.

நாசரேத்தில் கிறிஸ்தவ ஆலய கெபி உடைப்பு- பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2022-11-06 14:23 IST   |   Update On 2022-11-06 14:23:00 IST
  • நேற்றிரவு ஆலயத்தில் இருந்த கெபியை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.
  • கெபியை உடைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி மக்கள் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாசரேத்:

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரத்தில் புனித பரலோக மாதா ஆலயம் உள்ளது. ஆர்.சி. சர்ச் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மிகப்பெரிய சபைகளில் ஒன்றான இந்த ஆலயத்தில் தினந்தோறும் இரவு பிரார்த்தனைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்றிரவு இந்த ஆலயத்தில் இருந்த கெபியை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதனை அறிந்த அந்த ஆலய மக்கள் இன்று காலை ஆலயம் முன்பு திரண்டனர்.

அவர்கள் கெபியை உடைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி அங்குள்ள மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்லமுடியாமல் போனது. அவை அனைத்தும் சாலைகளில் அணிவகுத்து நின்றன.

தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஏரல் தாசில்தார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு தாசில்தார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News