தமிழ்நாடு

பொருட்காட்சி பணிக்கு வந்த சென்னை ஊழியர் திடீர் உயிரிழப்பு

Published On 2022-10-06 10:17 GMT   |   Update On 2022-10-06 10:17 GMT
  • நெல்லையில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
  • 108 ஆம்புலன்ஸ் மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அன்பழகனை கொண்டு சென்றுள்ளனர்.

நெல்லை:

சென்னை திருவல்லிக்கேனி அவ்வை சண்முகம் சாலையை சேர்ந்தவர் அன்பழகன்(வயது 43). இவர் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

தற்போது நெல்லையில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பணிக்காக அன்பழகன் வந்துள்ளார்.

சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சக ஊழியரான சரத் என்பவருடன் அவர் அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று இரவு அவர்கள் 2 பேரும் வழக்கம்போல் தூங்க சென்றனர். சிறிது நேரத்தில் அன்பழகன் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரத், விடுதி ஊழியர்களை அழைத்துள்ளார். பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அன்பழகனை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் நெஞ்சுவலியால் இறந்திருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News