தமிழ்நாடு செய்திகள்

ஆம்புலன்சுடன் டிரைவர் சங்கர்.

ராமேசுவரத்துக்கு வந்தபோது உயிரிழந்த வடமாநில பெண்ணின் உடலை 2,850 கி.மீ. எடுத்து சென்ற ஆம்புலன்சு டிரைவர்

Published On 2022-12-24 14:02 IST   |   Update On 2022-12-24 14:02:00 IST
  • ராமேசுவரத்துக்கு வந்தபோது துர்கா தேவி உடல் நலக்குறைவால் இறந்தார்.
  • உயிரிழந்தவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்திட குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

ராமநாதபுரம்:

ஹரியானா மாநிலம் மகேந்திரகர்வ் மாவட்டத்தை சேர்ந்த சிவசங்கர் (வயது70), துர்கா தேவி (65) மற்றும் அவரது மகன் ராமேசுவரம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். இந்நிலையில் கடந்த 17-ந்தேதி துர்கா தேவி உடல் நலக்குறைவால் இறந்தார்.

அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்திட குடும்பத்தினர் முடிவு செய்தனர். சுமார் 2 ஆயிரத்து 850 கிலோ மீட்டர் தூரம் என்பதால் ஆம்புலன்சு டிரைவர்கள் தயக்கம் காட்டினர். இந்த நிலையில் அந்த குடும்பத்தினர் த.மு.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் சலீமுல்லாகானை அணுகினர்.

இதை தொடர்ந்து அவர், மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராஹிம், மருத்துவ அணி செயலாளர் தாஜுதீன் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர்களின் ஆலோசனைப்படி உடலை எடுத்துச் செல்லவும், எரிபொருள் பராமரிப்பு செலவுக்காகவும் சிறு தொகையை மட்டும் பெற்றனர். பின்பு த.மு.மு.க. ஆம்புலன்ஸ் டிரைவர் சங்கர் 48 மணி நேரம் பயணம் செய்து துர்கா தேவியின் உடலை அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு சேர்த்தார்.

வடமாநில பக்தரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்ற ஆம்புலன்சு டிரைவர் மற்றும் நடவடிக்கை எடுத்த நிர்வாகிகளை த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., துணை பொதுச் செயலாளர் சலீமுல்லாகான் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News