தமிழ்நாடு

குடியிருப்புக்குள் முகாமிட்ட காட்டு யானைகள் கூட்டம்- பொதுமக்கள் அச்சம்

Published On 2023-10-22 06:06 GMT   |   Update On 2023-10-22 06:06 GMT
  • யானைகள் தேயிலை தோட்டங்களில் உலா வந்து கொண்டிருந்தது.
  • கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியையொட்டி வனப்பகுதிகளில் வனவிலங்குகள் அதிகமாக வாழ்ந்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி, ஊருக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. சில நேரங்களில் வீடுகளை சேதப்படுத்துவதுடன், மனிதர்களை தாக்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. இந்நிலையில் நாடு காணி, பொன்னுார் மற்றும் பொன்வயல் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

இந்த யானைகள் அங்கிருந்து, பாண்டியார் டான்டீ குடியிருப்பு அருகே உள்ள தேயிலை தோட்டங்களில் நேற்று உலா வந்து கொண்டிருந்தது. யானைகள் உலா வருவதை பார்த்த சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து பொது மக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானைகள் நடமாட்டத்தால் வெளியில் வரவே அச்சமாக உள்ளது. எனவே இங்கு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகள் ஊருக்குள் வராதவாறு கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News