தமிழ்நாடு

2 நாட்களுக்கு தமிழகத்தில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்- அசவுகரியம் ஏற்பட வாய்ப்பு

Published On 2023-07-29 08:01 GMT   |   Update On 2023-07-29 08:01 GMT
  • அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும்.
  • சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

சென்னை:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 4-ந்தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும். ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2-ல் இருந்து 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News