தமிழ்நாடு
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 105.40 அடியாக உயர்ந்தது

Published On 2022-04-24 05:21 GMT   |   Update On 2022-04-24 05:21 GMT
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. திறப்பை காட்டிலும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர்:

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று விநாடிக்கு 3,459 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 3,460 கன அடியாக உயர்ந்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. திறப்பை காட்டிலும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 105.30 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.40 அடியாக உயர்ந்தது.

Tags:    

Similar News