தமிழ்நாடு
பவானிசாகர் அணை

பவானிசாகர் அணை நீர்மட்டம் 104.77 அடியாக உயர்வு

Published On 2021-12-10 04:33 GMT   |   Update On 2021-12-10 04:33 GMT
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1,800 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 500 கனஅடி, பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 2,400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. எனினும் மிதமான அளவு தண்ணீர் தொடர்ந்து வருவதால் பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை நெருங்கி உள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 104.77 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,431 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1,800 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 500 கனஅடி, பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 2,400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News