தமிழ்நாடு
இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கிய வாலிபர்

கோவையை சேர்ந்த இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கிய வாலிபர் - எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

Published On 2021-12-08 06:22 GMT   |   Update On 2021-12-08 06:22 GMT
திருமணம் செய்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய குமரி வாலிபர் மீது கோவை இளம்பெண் எஸ்.பி. ஆபீஸில் புகார் அளித்துள்ளார்.

நாகர்கோவில்:

திருமணம் செய்வதாக காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க இளம்பெண் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

கோவை மாவட்டம் பல்லடம் ராயபாளையம் அபிராமி நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரி(26) இவர் மாவட்ட எஸ்.பி. ஆபிஸ் அளித்த புகார் மனு.

கோவை மாவட்டம் பல்லடத்தில் வேலை பார்த்தபோது நாகர்கோவில் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நட்பாக பழகினேன் பின்னர் அவர் காதலிப்பதாக என்னிடம் கூறி அடிக்கடி போனில் பேசி வந்தார். இந்நிலையில் என்னை மதுரை மற்றும் கோயம்புத்தூருக்கு அழைத்து சென்று என்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஓட்டலில் வைத்து என்னுடன் உல்லாசமாக இருந்தார். 

இதன் மூலம் நான் கர்ப்பம் ஆனேன். ஆனால் என்னை கட்டாயப்படுத்தி கருவை கலைக்க வைத்தார்.பின்னர் கன்னியாகுமரிக்கு என்னை அழைத்து வந்து ஓட்டலில் தங்கவைத்துவிட்டு பின்னர் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றபோது அவருடைய அப்பா அம்மா அக்கா ஆகியோர் என்னை மிரட்டினார்கள். மேலும் நான் படிக்கவில்லை அழகாக இல்லை என்று கூறி ஏமாற்றி விட்டாய் என்று என்னை மிரட்டினார்கள். எனவே என்னை காதலனுடன் என்னை சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News