செய்திகள்
புகார்

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் புகார் தெரிவிக்கலாம்

Published On 2021-01-26 05:03 GMT   |   Update On 2021-01-26 05:03 GMT
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் புகார் தெரிவிக்கலாம் என்று தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: 

தேர்தல்துறை சார்பில் நேற்று தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. புதுவை கம்பன் கலையரங்கில் நடந்த விழாவில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி  குமார் வரவேற்றுப் பேசினார். 

 விழாவில் வாக்காளர் உறுதிமொழியை தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் வாசிக்க முதல்முறை வாக்காளர்கள் அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர். சிறந்த  வாக்காளர் பதிவு அதிகாரி, வாக்குச்சாவடி நிலைய அலுவலர் விருது, சிறந்த இணைப்பு அதிகாரி விருது பொதுசேவை அமைப்புக்கான விருதுகள் வழங்கப்பட்டன. 

வாக்காளர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

விழாவில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் பேசியதாவது:- 

தேர்தலின்போது புதுச்சேரியிலும், தமிழகத்திலும் பணம் வழங்கப்படுகிறது. இது தவறான அணுகுமுறை ஆகும். இதை அனைவரும் கூட்டாக இணைந்து தடுக்க  வேண்டும். ஓட்டுக்காக யாராவது பணம் கொடுத்தால் அதுகுறித்து முதல்முறை வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவிக்கலாம். 
 
இவ்வாறு அவர் கூறினார். 

விழாவில் புதுவை தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங், கலெக்டர் பூர்வா கார்க் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். 
Tags:    

Similar News