செய்திகள்
மின்சாரம் தாக்குதல்

திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்திய 2 பேர் மின்சாரம் தாக்கி பலி

Published On 2020-12-01 08:21 GMT   |   Update On 2020-12-01 08:21 GMT
திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்திய ஆசிரியர் பயிற்சி வாலிபர் உள்பட 2 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருமலை:

திருவண்ணாமலை மாவட்டம் நிம்மியம்பட்டை சேர்ந்தவர் ராஜா (வயது28). பி.எஸ்.சி., பி.எட்., படித்துள்ளார். 23-ந்தேதி இவரும், சகோதரர் ஜெயச்சந்திரா என்பவரும் வேலூருக்கு வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு, சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டி கடத்த திருப்பதிக்கு வந்தனர்.

அவர்களுடன் அப்பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்ற வாலிபரும் உடன் வந்தார்.

3 பேரும் நேற்று முன்தினம் செம்மர கடத்தல் கும்பலுடன் சேர்ந்து திருப்பதியை அடுத்த எராவாரிப்பாளையம் மண்டலம் போடேவான்டலப்பள்ளி, பல்லம்வாரிப்பள்ளி ஆகிய கிராமங்களுக்கு அருகில் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி தோளில் தூக்கி வந்தனர்.

விவசாய நிலத்தில் வந்தபோது, வழியில் இருந்த ஒரு மின்கம்பத்தில் இருந்து மின்கம்பிகள் அறுந்து கீழே கிடந்துள்ளது.

அதை, கவனிக்காமல் வந்தபோது ராஜா, விஜயகுமார் ஆகியோர் மின்கம்பியை மிதித்தனர். அதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் 2 பேரின் பெற்றோரும், உறவினர்களும் திருப்பதி அரசு ஆஸ்பதிரிக்கு விரைந்து வந்து அவர்களின் பிணத்தை பெற்று சொந்த கிராமத்தில் இறுதி சடங்கை நடத்தினர்.
Tags:    

Similar News