செய்திகள்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா

Published On 2020-11-10 19:00 IST   |   Update On 2020-11-10 19:00:00 IST
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:

தமிழகத்தில் பரவிவரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கிண்டி கிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar News