செய்திகள்
தற்கொலை

கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் டிரைவர் தற்கொலை

Published On 2020-08-29 05:58 IST   |   Update On 2020-08-29 05:58:00 IST
கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்தவர் பாலாஜி (வயது 32). குவைத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து குவைத்துக்கு சென்றார். அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் பாலாஜி நேற்று அதிகாலை குவைத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி மற்றும் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

சிறிது நேரத்தில் தான் தங்கி இருந்த முதல் மாடி கட்டிடத்தில் ‘லிப்ட்’ அமைப்பதற்காக கட்டுமான பணி நடந்து வரும் வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News