செய்திகள்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டில் இன்று மேலும் 283 பேருக்கு கொரோனா

Published On 2020-08-27 14:20 IST   |   Update On 2020-08-27 14:20:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 283 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,711 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு:

தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 97 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 606 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 060 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 283 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,711 ஆக உயர்ந்துள்ளது.

Similar News