செய்திகள்
ஈரோடு மாவட்ட ஆட்சியர்

ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா

Published On 2020-08-21 16:09 IST   |   Update On 2020-08-21 16:09:00 IST
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்ட ஆட்சியர் கதிரவன் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆட்சியருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முகாம் அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

Similar News