செய்திகள்
பவானிசாகர் அணை

பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள எச்சரிக்கை

Published On 2020-08-06 11:39 IST   |   Update On 2020-08-06 11:39:00 IST
பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால், உபரி நீர் திறக்கப்பட உள்ளதாக ஆற்றங்கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:

நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. நீலகிரியில் பெய்யும் கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

105 அடி கொண்ட பவானிசாகர் அணை நீர்வரத்து அதிகரிப்பால் தினமும் 2 அடி உயர்ந்து 91.75 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 24,112 கனஅடியில் இருந்து 29,667 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால், உபரி நீர் திறக்கப்பட உள்ளதாக பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Similar News