செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-07-09 05:53 GMT   |   Update On 2020-07-09 05:53 GMT
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 487 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,23,724 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,22,350  பேருக்கும், டெல்லியில் 1,04,864 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,200ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 619 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 16 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 
Tags:    

Similar News