செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுச்சேரியில் ஒரேநாளில் 30 பேருக்கு கொரோனா

Published On 2020-07-01 11:32 IST   |   Update On 2020-07-01 11:32:00 IST
புதுச்சேரியில் ஒரேநாளில் 30 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 739ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 5.85 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3.47 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,74,761 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 90,167 பேருக்கும், டெல்லியில் 87,360 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் ஒரேநாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 739ஆக உயர்ந்துள்ளது. 

Similar News