செய்திகள்
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

கூனிச்சம்பட்டில் கட்டுப்பாட்டு பகுதி மக்களுக்கு நிவாரணம்- நாராயணசாமி வழங்கினார்

Published On 2020-06-30 12:31 GMT   |   Update On 2020-06-30 12:34 GMT
கூனிச்சம்பட்டில் கட்டுப்பாட்டு பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.
திருக்கனூர்:

திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு காலனியில் கொரோனா தொற்றால் 30-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று கூனிச்சம்பட்டு காலனிக்கு சென்று, ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தடுப்புக்கு வெளியே இருந்தபடி, அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. திருக்கனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி பாலசுப்ரமணி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News