செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

காஞ்சிபுரத்தில் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-06-26 15:02 IST   |   Update On 2020-06-26 15:02:00 IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,573 ஆக உள்ளது.
காஞ்சிபுரம்:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,977 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 39,999 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 911-ஆக அதிகரித்துள்ளது.
 
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,488 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 85 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,573 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 679 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். 

Similar News