செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் மோதல்- பெண் டாக்டர் பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதலில் காயம் அடைந்த பயிற்சி பெண் டாக்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் பணியாற்றியவர் ஆவார்.
சிவகங்கை:
பெரம்பலூரைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவர் அங்கு டெய்லராக உள்ளார். இவருடைய மகள் அகிலா (வயது 23). இவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்தார்.
அதன்பின்பு அகிலா கடந்த ஓராண்டாக பயிற்சி டாக்டராக சிவகங்கை அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த மார்ச் 28-ந் தேதியுடன் பயிற்சி டாக்டர் பணி முடிந்தது. இந்த நிலையில் அவரை கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, மேலும் ஒரு மாதம் பணிபுரிய உத்தரவிடப்பட்டது.
அதன்பின்பு சிவகங்கை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றினார். சம்பவத்தன்று அகிலாவும், மற்றொரு பயிற்சி டாக்டரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த பிரபஞ்சன் (23) என்பவரும் பூவந்தியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு சான்றிதழை பெற மோட்டார் சைக்கிளில் சென்று இருந்தனர். அந்த சான்றிதழை பெற்றுக் கொண்டு சிவகங்கையை நோக்கி திரும்பி வந்தனர்.
குயவன்விலக்கு அருகே வந்தபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஏனாதியைச் சேர்ந்த கருப்பணன் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன.
இதில் டாக்டர்கள் பிரபஞ்சன், அகிலா மற்றும் கருப்பணன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அகிலா நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அகிலாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊரான பெரம்பலூருக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவ கல்லூரி டீன் ரெத்தினவேல் மற்றும் டாக்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
பெரம்பலூரைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவர் அங்கு டெய்லராக உள்ளார். இவருடைய மகள் அகிலா (வயது 23). இவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்தார்.
அதன்பின்பு அகிலா கடந்த ஓராண்டாக பயிற்சி டாக்டராக சிவகங்கை அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த மார்ச் 28-ந் தேதியுடன் பயிற்சி டாக்டர் பணி முடிந்தது. இந்த நிலையில் அவரை கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, மேலும் ஒரு மாதம் பணிபுரிய உத்தரவிடப்பட்டது.
அதன்பின்பு சிவகங்கை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றினார். சம்பவத்தன்று அகிலாவும், மற்றொரு பயிற்சி டாக்டரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த பிரபஞ்சன் (23) என்பவரும் பூவந்தியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு சான்றிதழை பெற மோட்டார் சைக்கிளில் சென்று இருந்தனர். அந்த சான்றிதழை பெற்றுக் கொண்டு சிவகங்கையை நோக்கி திரும்பி வந்தனர்.
குயவன்விலக்கு அருகே வந்தபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஏனாதியைச் சேர்ந்த கருப்பணன் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன.
இதில் டாக்டர்கள் பிரபஞ்சன், அகிலா மற்றும் கருப்பணன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அகிலா நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அகிலாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊரான பெரம்பலூருக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவ கல்லூரி டீன் ரெத்தினவேல் மற்றும் டாக்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.