செய்திகள்
“கடைகளை மூடும் நிலையை உருவாக்கி விடாதீர்கள்”- பொதுமக்களுக்கு நாராயணசாமி வேண்டுகோள்
ஊரடங்கு விதி மீறல் அதிகரித்து வருகிறது. எனவே புதுச்சேரியில் கடைகளை மூடும் நிலையை உருவாக்கி விடாதீர்கள் என பொதுமக்களுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவையில் 3 பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரவு பகலாக பணி செய்துவரும் காவல் துறையினருக்கும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளை கேட்டுள்ளேன். புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து அரசுக்கு தொல்லை கொடுப்பதோடு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க அரசு சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அரசின் செயல்பாட்டுக்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்கிறார். அதன் முதல் கட்டமாக நீதிமன்ற உத்தரவுகளை மீறி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். போலீசார் மீது வசை பாடுவதும் குற்றச்சாட்டுகளை கூறுவதும் அவரது தொடர் கதையாகி உள்ளது. போலீசாருக்கு பாதுகாப்பு கொடுக்கும் பொறுப்பு டி.ஜி.பி.க்கு உள்ளது என்று கூறி உள்ளேன். இதேபோல் கலால் துறை, வருவாய்துறை அதிகாரிகளும், கவர்னர் கிரண்பெடியின் சட்டவிரோத செயல்பாட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி வருகிறோம்.
நான் தொடர்ந்து மக்களை கேட்டுக்கொண்ட நிலையிலும் நாள்தோறும் பொதுமக்கள் வெளியில் நடமாடுவது அதிகரித்து வருகிறது. 3 நாட்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வைத்து கொள்ளுங்கள் என்றால் பொதுமக்கள் கேட்பதில்லை. எதையாவது காரணம் கூறி வெளியில் நடமாடுகிறார்கள். இது கொரோனா நோய் தொற்றை அதிகரிக்க வாய்ப்பாக அமைந்து விடும்.ஊரடங்கு விதி மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் கடைகளை மூட சில நகரங்களில் உத்தரவிடப்பட்டுள்ளது. புதுவையில் தொடர்ந்து இதே போல் மக்கள் நடமாடினால் 2 நாட்கள் கடையை மூடிவிட்டு 3-வது நாள் மட்டும் கடையை திறக்கும் சூழ்நிலை ஏற்படும். மக்கள் அரசின் உத்தரவுகளை கடைபிடிக்காவிட்டால் இதுபோன்ற உத்தரவுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவோம். அதுபோன்ற நிலையை உருவாக்கி விடாதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அத்தகைய சூழ்நிலையை உருவாக்க எங்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவையில் 3 பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரவு பகலாக பணி செய்துவரும் காவல் துறையினருக்கும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளை கேட்டுள்ளேன். புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து அரசுக்கு தொல்லை கொடுப்பதோடு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க அரசு சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அரசின் செயல்பாட்டுக்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்கிறார். அதன் முதல் கட்டமாக நீதிமன்ற உத்தரவுகளை மீறி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். போலீசார் மீது வசை பாடுவதும் குற்றச்சாட்டுகளை கூறுவதும் அவரது தொடர் கதையாகி உள்ளது. போலீசாருக்கு பாதுகாப்பு கொடுக்கும் பொறுப்பு டி.ஜி.பி.க்கு உள்ளது என்று கூறி உள்ளேன். இதேபோல் கலால் துறை, வருவாய்துறை அதிகாரிகளும், கவர்னர் கிரண்பெடியின் சட்டவிரோத செயல்பாட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி வருகிறோம்.
நான் தொடர்ந்து மக்களை கேட்டுக்கொண்ட நிலையிலும் நாள்தோறும் பொதுமக்கள் வெளியில் நடமாடுவது அதிகரித்து வருகிறது. 3 நாட்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வைத்து கொள்ளுங்கள் என்றால் பொதுமக்கள் கேட்பதில்லை. எதையாவது காரணம் கூறி வெளியில் நடமாடுகிறார்கள். இது கொரோனா நோய் தொற்றை அதிகரிக்க வாய்ப்பாக அமைந்து விடும்.ஊரடங்கு விதி மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் கடைகளை மூட சில நகரங்களில் உத்தரவிடப்பட்டுள்ளது. புதுவையில் தொடர்ந்து இதே போல் மக்கள் நடமாடினால் 2 நாட்கள் கடையை மூடிவிட்டு 3-வது நாள் மட்டும் கடையை திறக்கும் சூழ்நிலை ஏற்படும். மக்கள் அரசின் உத்தரவுகளை கடைபிடிக்காவிட்டால் இதுபோன்ற உத்தரவுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவோம். அதுபோன்ற நிலையை உருவாக்கி விடாதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அத்தகைய சூழ்நிலையை உருவாக்க எங்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.