செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுவையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தீவிர தடுப்பு நடவடிக்கை

Published On 2020-04-10 09:45 GMT   |   Update On 2020-04-10 09:45 GMT
புதுவையில் மேலும் 2 பேருக்கு கொரோனா பரவி இருப்பதால் நோய் தடுப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய அரியாங்குப்பத்தைச் சேர்ந்த 2 பேர், இதில் ஒருவரின் மனைவி, திருவண்டார் கோவிலை சேர்ந்த ஒருவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருந்தது. இவர்கள் 4 பேரும் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாகியை சேர்ந்த 71 வயது முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே வெளிநாடு சென்று திரும்பிய மூதாட்டி சிகிச்சையில் உடல்நலன் சீராகி வீடு திரும்பினார். புதுவையில் சந்தேகத்தின் அடிப்படையில் பலர் பரிசோதனை செய்யப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லாவிட்டாலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பரிசோதனைக்கு அனுப்பியதில் மூலக்குளம் அன்னை தெரசா நகரை சேர்ந்த ஒருவருக்கும், திருவண்டார் கோவிலை சேர்ந்த 57 வயது எண்ணெய் வியாபாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள். இதனை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் உறுதி செய்துள்ளார்.

இதனிடையே மூலக்குளம் பகுதிக்கு மாவட்ட கலெக்டர் அருண், சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு ராகுல்அலுவால் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். தொற்று ஏற்பட்டு நபர் வசிக்கும் பகுதிகள் தடுப்புகள் ஏற்படுத்தி தனிமைப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

மேலும் 2 பேருக்கு கொரோனா பரவி இருப்பதால் புதுவையில் நோய் தடுப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News