செய்திகள்
முதல்-அமைச்சர் நாராயணசாமி

சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை- நாராயணசாமி அறிவிப்பு

Published On 2020-04-03 17:26 GMT   |   Update On 2020-04-03 17:26 GMT
டெல்லி மாநாட்டிற்கு புதுவையில் இருந்து அதிக அளவில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி:

முதல்-அமைச்சர் நாராயணசாமி  வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டிற்கு புதுவையில் இருந்து அதிக அளவில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் சிலர் விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற தவறான தகவலை பரப்புபவர்கள் குறித்து சைபர் கிரைம் மூலமாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்.

யார் இந்த விஷமத்தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பபடும். தவறான கருத்துக்களை தேவையில்லாமல் பரப்பி புதுவை மாநிலத்தில் குழப்பத்தை விளைவிக்க வேண்டாம்.

பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றிய போது கொரோனா தடுப்பு குறித்து பல்வேறு கருத்துக்களை கூறினார். வருகிற 14-ந் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் அதனை படிப்படியாக திரும்பப் பெறுவது குறித்து மாநில அரசுகள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

கொரோனா தடுப்பு பணிகளுக்கு தேவையான நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க முன்வர வேண்டும் அதுபோன்று ஜி.எஸ்.டி. மானியம் உள்ளிட்டவைகளை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

இவ்வாறு நாராயணசாமி வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News