செய்திகள்
கொரோனா வைரஸ்

பொழிச்சலூரில் 71 வயது மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-03-28 08:11 GMT   |   Update On 2020-03-28 08:11 GMT
பல்லாவரம் பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த 71 வயது மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாம்பரம்:

பல்லாவரம் பொழிச்சலூர் கமி‌ஷனர் காலனியில் 71 வயது மூதாட்டி கடந்த சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டார்.

இதையடுத்து கடந்த 25-ந்தேதி அவரை போரூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அவர் ரத்த மாதிரியை பரிசோதனை செய்தபோது கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தது. உடனடியாக மூதாட்டிக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மூதாட்டியின் கணவர் மற்றும் அவரது மகன், மருமகள், 2 பேரன்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடமும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News