செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா அச்சம்- மாமல்லபுரத்தில் பண்னைவீடுகள் மூடல்

Published On 2020-03-20 12:23 IST   |   Update On 2020-03-20 12:23:00 IST
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தற்போது மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து பண்ணை வீடுகள், ரிசார்ட்டுகள், ஓட்டல்கள் மற்றும் தனியார் மது பார்கள் மூடப்பட்டுள்ளது.

மாமல்லபுரம்:

கொரோனா வைரஸ் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வருகிற 31-ந் தேதி வரை தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாமல்லபுரம் புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்து ரதம், பட்டர்பால் போன்ற பகுதிகள் மூடப்பட்டன. சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இன்றி அப்பகுதி வெறிச்சோடி கிடக்கிறது.

இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக தற்போது மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து பண்ணை வீடுகள், ரிசார்ட்டுகள், ஓட்டல்கள் மற்றும் தனியார் மது பார்கள் மூடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் பதிவுசெய்தவர்கள் சிலர் அறைகளை கேன்சல் செய்து வருகிறார்கள். அவர்களிடம் ரிசார்ட்டு நிர்வாகம் கேன்சலிங் சார்ஜ் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா பயம் இல்லாத சில சுற்றுலா பயணிகள் ஆன்லைன் பதிவை கேன்சல் செய்யாமல் வந்து ரிசார்ட்டுகளில் அறைகளை கேட்கிறார்கள். ரிசார்ட் நிர்வாகம் அறை கொடுக்க மறுப்பதால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

Similar News