செய்திகள்
பண்ருட்டி காதலனுடன் மாயமான இலங்கை காதலி - போலீசில் தந்தை புகார்
பேஸ்புக் காதலனை பார்க்க இலங்கையில் இருந்து சென்னை வந்த காதலி மாயமான சம்பவம் குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி:
இலங்கை ரத்தினபுரி மாவட்டம் சமகிபுராவை சேர்ந்தவர் ஜெயினுலாபுதீன். குவைத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மகள் ரிஸ்வி பாத்திமா குப்தா (வயது21).
இவருக்கும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வி.ஆண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த முகமது முபாரக் (25 ) என்பவருக்கும் இடையே பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டது.
சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் முகமது முபாரக் வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி பேஸ்புக் மூலம் ரிஸ்வி பாத்திமா குப்தாவுடன் கருத்துக்களை பரிமாறினார். இதனால் 2 பேருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இவர்கள் தினமும் பதிவுகளை தெரிவித்து தங்களது காதலை வளர்த்தனர்.
இதற்கிடையே ரிஸ்வி பாத்திமா குப்தா தனது காதலனிடம் உங்களை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன் என்று பேஸ்புக் மூலம் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த காதலன் முகமது முபாரக் கண்டிப்பாக பார்க்கலாம் என்று தெரிவித்து உள்ளார்.
அதன்படி ரிஸ்வி பாத்திமா குப்தா கடந்த 26-ந் தேதி டூரிஸ்ட் விசா எடுத்து இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தார். பின்னர் அங்கிருந்து தனது செல்போனில் காதலனிடம் பேசினார். பின்னர் 2 பேரும் சென்னையில் சந்தித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் பண்ருட்டி வந்தனர்.
இந்த தகவல் காதலியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் குவைத்தில் இருந்து அவசரமாக விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர் த.மு.மு.க. அமைப்பை தொடர்பு கொண்டு நடந்த விவரம் குறித்து தெரிவித்தனர். அங்கு காதலனின் முகவரியை பெற்றுக்கொண்டு நேராக பண்ருட்டி த.மு.மு.க.நகர செயலாளர் அலாவுதீனை தொடர்பு கொண்டனர்.
பின்னர் அங்கிருந்து காதலியின் தந்தை ஜெயினுலாபுதீன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவ்விடம் புகார் மனு கொடுத்தார். அதில் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு கூறி இருந்தார். இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பண்ருட்டி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலமையிலான போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின்னர் முகமது முபாரக்கை தேடி வி. ஆண்டிக்குப்பம் கிராமத்துக்கு போலீசார் சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை. தனது காதலியுடன் மாயமாகி விட்டது தெரியவந்தது. உடனே 2 பேரின் போட்டோவின் மூலம் அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இலங்கை ரத்தினபுரி மாவட்டம் சமகிபுராவை சேர்ந்தவர் ஜெயினுலாபுதீன். குவைத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மகள் ரிஸ்வி பாத்திமா குப்தா (வயது21).
இவருக்கும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வி.ஆண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த முகமது முபாரக் (25 ) என்பவருக்கும் இடையே பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டது.
சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் முகமது முபாரக் வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி பேஸ்புக் மூலம் ரிஸ்வி பாத்திமா குப்தாவுடன் கருத்துக்களை பரிமாறினார். இதனால் 2 பேருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இவர்கள் தினமும் பதிவுகளை தெரிவித்து தங்களது காதலை வளர்த்தனர்.
இதற்கிடையே ரிஸ்வி பாத்திமா குப்தா தனது காதலனிடம் உங்களை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன் என்று பேஸ்புக் மூலம் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த காதலன் முகமது முபாரக் கண்டிப்பாக பார்க்கலாம் என்று தெரிவித்து உள்ளார்.
அதன்படி ரிஸ்வி பாத்திமா குப்தா கடந்த 26-ந் தேதி டூரிஸ்ட் விசா எடுத்து இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தார். பின்னர் அங்கிருந்து தனது செல்போனில் காதலனிடம் பேசினார். பின்னர் 2 பேரும் சென்னையில் சந்தித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் பண்ருட்டி வந்தனர்.
இந்த தகவல் காதலியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் குவைத்தில் இருந்து அவசரமாக விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர் த.மு.மு.க. அமைப்பை தொடர்பு கொண்டு நடந்த விவரம் குறித்து தெரிவித்தனர். அங்கு காதலனின் முகவரியை பெற்றுக்கொண்டு நேராக பண்ருட்டி த.மு.மு.க.நகர செயலாளர் அலாவுதீனை தொடர்பு கொண்டனர்.
பின்னர் அங்கிருந்து காதலியின் தந்தை ஜெயினுலாபுதீன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவ்விடம் புகார் மனு கொடுத்தார். அதில் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு கூறி இருந்தார். இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பண்ருட்டி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலமையிலான போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின்னர் முகமது முபாரக்கை தேடி வி. ஆண்டிக்குப்பம் கிராமத்துக்கு போலீசார் சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை. தனது காதலியுடன் மாயமாகி விட்டது தெரியவந்தது. உடனே 2 பேரின் போட்டோவின் மூலம் அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.