செய்திகள்
வேலூர் அருகே தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன் போக்சோ சட்டத்தில் கைது
வேலூர் அருகே மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்த தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் அடிக்கடி மது குடித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுபோதையில் வீட்டுக்கு சென்ற சிறுவன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது 16 வயது தங்கையை கட்டாயப்படுத்தி கற்பழித்தார். இதுபற்றி வெளியே சொன்னால் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினார். இதனால் அவரது தங்கை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். தற்போது அந்த சிறுமி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுபற்றி அவளது பெற்றோர் கேட்ட போது நடந்த சம்பவத்தை கூறினார்.
இதனையடுத்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் அளித்தார்.
போலீசார் இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து 17 வயது சிறுவனை கைது செய்தனர். அவனை செங்கல்பட்டு சிறுவர் ஜெயிலில் அடைத்தனர்.