செய்திகள்
வேப்பூர் அருகே விபத்து: தந்தை- மகள் பலி
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகள் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆயர்மடத்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். (வயது 40). இவரது மகள் திவ்ய ப்ரியா (19).
இவருக்கு இன்று திருச்சியில் தேர்வு நடக்கிறது. இதில் பங்கேற்க திவ்யப்ரியா தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
இவர்களது மோட்டார் சைக்கிள் வேப்பூர் அருகே ஏ.சித்தூர் சர்க்கரை ஆலை பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது பின்னால் கோழி ஏற்றிய மினி லாரி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்றனர்.
இந்த விபத்தில் தந்தை- மகள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் திவ்யப்ரியா, வேல்முருகன் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தனர்.
தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இறந்து போன தந்தை, மகள் உடல்களை பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய மினிலாரியை தேடி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆயர்மடத்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். (வயது 40). இவரது மகள் திவ்ய ப்ரியா (19).
இவருக்கு இன்று திருச்சியில் தேர்வு நடக்கிறது. இதில் பங்கேற்க திவ்யப்ரியா தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
இவர்களது மோட்டார் சைக்கிள் வேப்பூர் அருகே ஏ.சித்தூர் சர்க்கரை ஆலை பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது பின்னால் கோழி ஏற்றிய மினி லாரி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்றனர்.
இந்த விபத்தில் தந்தை- மகள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் திவ்யப்ரியா, வேல்முருகன் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தனர்.
தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இறந்து போன தந்தை, மகள் உடல்களை பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய மினிலாரியை தேடி வருகிறார்கள்.