செய்திகள்
கப்பலின் பாகம்

கப்பலின் பாகம் கடற்கரையில் ஒதுங்கியதால் பரபரப்பு

Published On 2019-12-07 03:34 GMT   |   Update On 2019-12-07 03:34 GMT
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கப்பலின் பாகம் கடற்கரையில் ஒதுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சி.புதுப்பேட்டை கடற்கரை பகுதியில் நேற்று காலை ஏதோ ஒரு ராட்சத பொருள் கடல் நீரில் மிதப்பதை அந்த பகுதி மீனவர்கள் பார்த்தனர். உடன் அங்கிருந்தவர்கள் சிறிய வகை படகில் உள்ளே சென்று அதை கரைக்கு கயிறுகட்டி இழுத்து வந்தனர். அது, கப்பலில் இருக்கும் கண்டெய்னர் ஏர்கூலர் பாகம் என்பது தெரியவந்தது.

தற்போது கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வந்ததால், ஆழ்கடல் பகுதியில் இருந்து கரைக்கு அடித்து வந்து இருக்கலாம் என்று மீனவர்கள் தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த கடலோர காவல் குழும போலீசார் சி.புதுப்பேட்டை கடற்கரை பகுதிக்கு வந்தனர். அங்கு கரை ஒதுங்கி கிடந்த பாகத்தை பார்வையிட்ட அவர்கள், இது ஏதேனும் கப்பலில் இருந்து விழுந்து இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

மேலும் கப்பலின் பாகத்தை அங்கிருந்து லாரியில் ஏற்றி, கடலூருக்கு எடுத்து வந்தனர். இது தொடர்பாக கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News