செய்திகள்
கோப்பு படம்

ஸ்டவ் வெடித்த விபத்தில் ரெயில்வே பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி

Published On 2019-11-16 13:51 GMT   |   Update On 2019-11-16 13:51 GMT
ஈரோடு அருகே ஸ்டவ் வெடித்த விபத்தில் ரெயில்வே பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு கள்ளுக்கைடமேடு ஈ.வி.ஆர். விதியை சேர்ந்தவர் சாகர் ரகுநாத் (வயது 27). இவருடைய மனைவி ‌ஷர்தா (23). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதில் ‌ஷர்தா ஈரோடு ரெயில்வே எலக்ட்ரிக் லோகோ பணிமனையில் பயிற்சி ஊழியராக உள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை ‌ஷர்தா வீட்டில் இருந்த போது காபி போடுவதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து அவர் மீது தீப்பிடித்தது.

இதில் ‌ஷர்தாவின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது வேதனையால் அலறினார். அப்போது அவருடைய கணவர் சாகர் ரகுநாத் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ‌ஷர்தாவின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தார்.

தீயில் கருகி படுகாயமடைந்த ‌ஷர்தாவை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ‌ஷர்தாவுக்கு 90 சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ‌ஷர்தா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News