செய்திகள்
பெண்ணாடம் அருகே லாரி டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே லாரி டிரைவர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவர் அரியலூர் பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
சரவணன் நேற்று இரவு அவரது குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட்டார். பின்னர் அவர்கள் வீட்டின் கதவை பூட்டி விட்டு காற்றுக்காக வீட்டின் மாடியில் படுத்து தூங்கினர்.
இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நேற்று நள்ளிரவில் சரவணன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் வீட்டில் இருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்தனர். அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இன்று காலை கண்விழித்த சரவணன் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போயிருந்தது. மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்ற நகை- பணத்தின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இது குறித்து பெண்ணாடம் போலீசில் சரவணன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
வீட்டில் உள்ளவர்கள் மாடியில் தூங்கி கொண்டிருக்கும் போதே மர்ம மனிதர்கள் வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதி பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவர் அரியலூர் பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
சரவணன் நேற்று இரவு அவரது குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட்டார். பின்னர் அவர்கள் வீட்டின் கதவை பூட்டி விட்டு காற்றுக்காக வீட்டின் மாடியில் படுத்து தூங்கினர்.
இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நேற்று நள்ளிரவில் சரவணன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் வீட்டில் இருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்தனர். அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இன்று காலை கண்விழித்த சரவணன் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போயிருந்தது. மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்ற நகை- பணத்தின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இது குறித்து பெண்ணாடம் போலீசில் சரவணன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
வீட்டில் உள்ளவர்கள் மாடியில் தூங்கி கொண்டிருக்கும் போதே மர்ம மனிதர்கள் வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதி பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.