செய்திகள்
அ.தி.மு.க. மெகா கூட்டணியை கண்டு தி.மு.க. பயப்படுகிறது - நடிகர் சரவணன் பிரசாரம்
அ.தி.மு.க.வின் மெகா கூட்டணியை கண்டு திமுக பயப்படுகிறது என தேர்தல் பிரசார கூட்டத்தில் நடிகர் சரவணன் கூறியுள்ளார். #ActorSaravanan
ஈரோடு:
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் சரவணன் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
ஈரோடு அ.தி.மு.க. வேட்பாளர் கொங்கு மணிமாறன் ஆதரித்து நடிகர் சரவணன் ஈரோட்டில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்து ஓட்டு கேட்டார்.
நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், நானும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கொங்கு நாட்டு பகுதியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருப்பது நமக்கெல்லாம் பெருமை.
முதல்வர் மெகா கூட்டணியை அமைத்து இருக்கிறார். இது அவரது புத்திசாலி தனத்தை காட்டுகிறது. ஆட்சி திறமையை வெளிப்படுத்துகிறது. அ.தி.மு.க.வின் மெகா கூட்டணியை கண்டு தி.மு.க. பயப்படுகிறது.
பெரும்பாலான தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலினை பிடிப்பதில்லை. எனவே நாம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாடுபட்டு வருகிறார்.
இந்த ஆட்சி இன்னும் சில மாதங்கள் தான்... சில நாட்கள் தான்... என தப்பு கணக்கு போட்டார்கள். அந்த தப்பு கணக்கு இப்போது என்னாச்சி? அ.தி.மு.க. ஆட்சியை எவராலும் அசைத்து கூட பார்க்க முடியாது.
இவ்வாறு நடிகர் சரவணன் கூறினார். #ActorSaravanan
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் சரவணன் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
ஈரோடு அ.தி.மு.க. வேட்பாளர் கொங்கு மணிமாறன் ஆதரித்து நடிகர் சரவணன் ஈரோட்டில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்து ஓட்டு கேட்டார்.
நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், நானும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கொங்கு நாட்டு பகுதியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருப்பது நமக்கெல்லாம் பெருமை.
முதல்வர் மெகா கூட்டணியை அமைத்து இருக்கிறார். இது அவரது புத்திசாலி தனத்தை காட்டுகிறது. ஆட்சி திறமையை வெளிப்படுத்துகிறது. அ.தி.மு.க.வின் மெகா கூட்டணியை கண்டு தி.மு.க. பயப்படுகிறது.
பெரும்பாலான தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலினை பிடிப்பதில்லை. எனவே நாம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாடுபட்டு வருகிறார்.
இந்த ஆட்சி இன்னும் சில மாதங்கள் தான்... சில நாட்கள் தான்... என தப்பு கணக்கு போட்டார்கள். அந்த தப்பு கணக்கு இப்போது என்னாச்சி? அ.தி.மு.க. ஆட்சியை எவராலும் அசைத்து கூட பார்க்க முடியாது.
இவ்வாறு நடிகர் சரவணன் கூறினார். #ActorSaravanan