சினிமா செய்திகள்

செகண்ட் கேஸ் ஆப் சீதாராம்- திரைவிமர்சனம்

Published On 2026-02-22 13:53 IST   |   Update On 2026-02-22 13:53:00 IST
நவநீத் ஷாமின் இசை படத்தின் விறுவிறுப்புக்கு பலம்.

நேர்மையான போலீஸ் அதிகாரி விஜய ராகவேந்திரா. இவரது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி ஒன்றில் இரட்டை கொலைகள் நடக்கிறது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் இந்த கொலைகளை செய்வது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கலாம் என தெரியவருகிறது. இந்த கொடூர கொலைகள் நகர மக்களை உறைய செய்கிறது.

இதையடுத்து விசாரணையும் தீவிரமடைகிறது. இதற்கிடையில் கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டேவை போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வர போலீசார் உறைந்து போகிறார்கள். அது என்ன? கொலைகளை செய்தது யார்? கொலைக்கான பின்னணி என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.

நடிகர்கள்

போலீஸ் அதிகாரியாக வரும் விஜய ராகவேந்திரா பொறுப்பாக நடித்திருக்கிறார். படத்தில் பல்வேறு காட்சிகளில் பாராட்டும்படி உள்ளது. கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டேவின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. உஷா பந்தாரி உள்பட நடிகர் -நடிகைகள் அனைவருமே கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

இயக்கம்

கிரைம் - திரில்லர் பாணியில் யாருமே யூகிக்க முடியாதபடி வலுவான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் தேவிபிரசாத் ஷெட்டி. புதுமையான கதையும், காட்சி பின்னணியும் படத்துக்கு பலம்.

உளவியல் ரீதியான, மனநிலை பாதிக்கப்பட்ட மனிதரின் உள்ளார்ந்த குழப்பத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் பாராட்டக்கூடியது. சில காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

ஒளிப்பதிவு

ஹேமந்த் ஒளிப்பதிவில் காட்சிகளில் பரபரப்பு.

இசை

நவநீத் ஷாமின் இசை படத்தின் விறுவிறுப்புக்கு பலம்.

ரேட்டிங்-3/5

Tags:    

Similar News