செய்திகள்
மயிலாடுதுறையில் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி
மயிலாடுதுறையில் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. நேற்று 9-வது நாளில் நவநாள் திருப்பலி, பங்குதந்தைமரிய ஜோசப் ஜெரால்டு முன்னிலையில் தஞ்சை ஆயர் இல்ல மறைமாவட்ட முதன்மை குரு ஞானபிரகாசம் கூட்டு திருப்பலி கூட்டு பாடல் திருப்பலியும், அறந்தாங்கி பங்குதந்தை பிரிட்டோ திவ்விய நற்கருணை ஆராதனையும் நடத்தினர்.
மிக்கேல் சம்மனசு, ஆரோக்கிய நாதர், செபஸ்தியார், மாதா, புனிதவனத்து அந்தோணியார் மற்றும் புனித பதுவை அந்தோணியார் உள்ளிட்ட சொரூபங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளில் தேர்பவனி நடைபெற்று மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருத்தல பங்குதந்தை மரியஜோசப் ஜெரால்டு தலைமையில் பங்கு மன்றம், திருவிழா ஒருங்கிணைப்பு குழு, பங்கு மக்கள், இயேசுவின் கரங்கள் இயக்கத்தினர், திரு இருதய சகோதரர்கள், தூய இருதய மரிய அன்னை அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.