செய்திகள்

மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் பழுது- 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

Published On 2018-12-19 04:34 GMT   |   Update On 2018-12-19 04:34 GMT
மேட்டூர் புதிய அனல் மின் நிலைய பாய்லரில் ஏற்பட்ட பழுது காரணமாக நேற்று நள்ளிரவு முதல் 600 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
மேட்டூர்:

மேட்டூர் பழைய மற்றும் புதிய மின் நிலையங்கள் உள்ளன. பழைய அனல் மின் நிலையத்தில் 4 யூனிட்களில் தலா 210 மெகாவாட் மூலம் 840 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதே போல புதிய அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த மின்சாரம் நெய்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றிரவு புதிய அனல் மின் நிலைய பாய்லரில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் நள்ளிரவு முதல் இந்த அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஊழியர்கள் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆனாலும் இன்று காலை வரை புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கவில்லை. இதனால் அந்த அனல் மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இடங்களில் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News