செய்திகள்

சொத்துவரி உயர்வை கண்டித்து வேலூரில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2018-07-27 10:21 GMT   |   Update On 2018-07-27 10:21 GMT
சொத்துவரி உயர்வை கண்டித்து வேலூரில் தி.மு.க. சார்பில் புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. #DMKprotest
வேலூர்:

சொத்துவரியை உயர்த்திய அ.தி.மு.க. அரசை கண்டித்து வேலூர் மத்திய மாவட்ட மற்றும் மாநகர தி.மு.க. சார்பில் புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அவைத்தலைவர் முகமது சகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொருளாளர் நரசிம்மன், துணை தலைவர் ஆர்.பி.ஏழுமலை, முன்னாள் மண்டல குழு தலைவர்கள் சுனில்குமார், அய்யப்பன், மத்திய மாவட்ட மாணவரணி செயலாளர் சீனிவாசன், மாநகர செயலாளர் வி.எம்.பி.பாலாஜி, வக்கீல் பார்த்திபன், அ.மா.ராமலிங்கம், முன்னாள் துணைமேயர் சாதிக், முன்னாள் கவுன்சிலர் அன்பு, தயாநிதி உள்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, சொத்துவரி உயர்த்தியதை ரத்து செய்யகோரி அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். முடிவில் பகுதி செயலாளர் முருகபெருமான் நன்றி கூறினார். #DMKprotest

Tags:    

Similar News