செய்திகள்

கீழ்ப்பாக்கத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ.15 லட்சம் வைர நகைகள் கொள்ளை

Published On 2018-07-26 11:29 IST   |   Update On 2018-07-26 11:29:00 IST
சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ.15 லட்சம் மதிப்பிலான வைர நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
சென்னை:

அண்ணாநகர் கிழக்கு 5-வது தெருவில் ஜவுளி கடை நடத்தி வருபவர் தேவதாஸ். இவர் நேற்று இரவு அண்ணாநகரில் உள்ள கிளப்புக்கு சென்று விட்டு ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தார். உடன் சகோதரர் ராம், நண்பர் வினோத் ஆகியோரும் இருந்தனர். தேவதாஸ் ஆட்டோவின் ஓரத்தில் அமர்ந்து இருந்தார்.

கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தேவதாஸ் வைத்திருந்த பையை திடீரென பறித்துச் சென்று விட்டனர்.

அதில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் இருந்தது. அதிர்ச்சி அடைந்த தேவதாஸ் இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

தேவதாஸ் நகையுடன் வருவதை அறிந்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News