செய்திகள்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை: 8 மாத கால விசாரணைக்கு பின் அறிக்கை தாக்கல்- நீதிபதி ராஜேஸ்வரன்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக 8 மாத கால விசாரணைக்கு பின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் கூறினார். #Jallikattu
மதுரை:
ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டு போராட்டம் வெடித்தது.
மதுரை தமுக்கம் மைதானம், சென்னை மெரினா கடற்கரை, கோவை போன்ற பகுதிகளில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் ஜல்லிக்கட்டில் நடைபெற்ற வன்முறை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரையில் இன்று 6-வது கட்ட விசாரணையை நீதிபதி ராஜேஸ்வரன் நடத்தினார். அரசு சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற இந்த விசாரணையின் போது இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் விசாரிக்கப்பட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ராஜேஸ்வரன் இதுவரை 1,202 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். 8 மாத விசாரணைக்கு பிறகு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார். #Jallikattu
ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டு போராட்டம் வெடித்தது.
மதுரை தமுக்கம் மைதானம், சென்னை மெரினா கடற்கரை, கோவை போன்ற பகுதிகளில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் ஜல்லிக்கட்டில் நடைபெற்ற வன்முறை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரையில் இன்று 6-வது கட்ட விசாரணையை நீதிபதி ராஜேஸ்வரன் நடத்தினார். அரசு சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற இந்த விசாரணையின் போது இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் விசாரிக்கப்பட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ராஜேஸ்வரன் இதுவரை 1,202 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். 8 மாத விசாரணைக்கு பிறகு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார். #Jallikattu